Tamil Poem Picks
Poems
நாலாம்
வருட பதிப்பு
நான்முகனை வணங்கி
நாடிடுவோம் அவன் ஆசி ..
நாலாம் பதிப்பும் நயமுடனே வெளிவர
நலம் பல பெற்று நல்லுலகம் போற்றிடவே
நான்கு திசைகளிலும் ,..புகழ் பெற்று பவனி வர
நான்முகனை வணங்கி நாடிடுவோம் அவன் ஆசி ...
தொண்டுள்ளத் தோழர்களே
தொடரட்டும் உம் தொண்டு ...
சாதிகள் சாத்திரங்கள் மறைந்திடவே,,
சமத்துவமே எங்கெங்கும் ஒளிர்ந்திடவே ,,,,
எழுது கோலை அஸ்திரமாய் ஏந்தி நின்று
எண்ணமெல்லாம் புனிதமாக
எண்ணற்ற காவியங்கள் படைத்திடுங்கள்
ஏழுலகும் வியந்திடவே வாழ்ந்திடுங்கள்..
வாழ்க பல்லாண்டு!
|